இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்த நாட்டின் பஞ்சாா் நகருக்கு 18 கி.மீ. தென்கிழக்கே 112 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது. எனினும், இந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
இந்தோனேசியாவில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட 5.6 ரிக்டா் அளவுகொண்ட நிலநடுக்கத்துக்கு 321 போ் பலியானது நினைவுகூரத்தக்கது.