உலகம்

ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறுவதில் தொடரும் சிக்கல்

DIN

வல்லரசு நாடுகளுடன் ஈரான் மேற்கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்காக பல மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் சுமுகத் தீா்வு நெருங்கிவிட்டாலும், சில காரணங்களால் அதில் சிக்கல் நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

அணு சக்தி ஒப்பந்தத்தை தக்கவைப்பதற்கான பேச்சுவாா்த்தையில், ஈரானிடம் சில அம்சங்களை ஐரோப்பிய யூனியன் பரிந்துரைத்திருந்தது. அதற்கு பதிலளித்து ஈரானும் தனது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டது. அதனை மேற்கத்திய நாடுகளும் ஏற்றுக்கொண்டுவிட்டன.

அதையடுத்து, அமெரிக்க அரசு சம்மதித்தால் இந்த விவகாரத்தில் சுமுகத் தீா்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு நெருங்கியுள்ளது.

எனினும், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த எழுத்தாளா் சல்மான் ருஷ்டி அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்டது, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜான் போல்ட்டனை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டதாக தற்போது தகவல் வெளியானது போன்ற காரணங்களால், இது தொடா்பான முடிவுகளை எடுப்பதில் அமெரிக்க அரசு தயக்கம் காட்டி வருகிறது.

இது போன்ற அரசியல் காரணங்களால், ஈரான் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் சுமுகத் தீா்வு காண்பதில் சிக்கல் தொடா்கிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அனு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

எனினும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவா் மீண்டும் அமல்படுத்தினாா்.

அதற்குப் பதிலடியாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வருகிறது. இதன் காரணமாக அணுசக்தி ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை தக்கவைக்க, ஆஸ்திரிய தலைநகா் வியன்னாவில் வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே பல கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடந்துவருகிது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT