ஐரோப்பாவில் வீசி வரும் கடுமையான புயலினால் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து, ஜெர்மனிக்கு அதிகனழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரியாவில் வீசிய பலத்தக் காற்றினால் மரம் சாய்ந்ததில் 4 மற்றும் 8 வயதுடைய இரண்டு சிறுமிகள் பலியாகினர்.
இந்த புயல் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: “புயலினால் 13 பேர் காயமடைந்துள்ளனர். அதில், இருவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. புயலினால் பாதிக்கப்பட்டவர்களில் பலர் சுற்றுலாவிற்காக வருகை புரிந்தவர்கள் ஆவர்.” என்றனர்.
இரு சிறுமிகளின் இறப்பு குறித்து ஆஸ்திரிய அதிபர் அலெக்ஸாண்டர் வான் டர் பெல்லன் கூறியதாவது: “ இரு சிறுமிகளின் மறைவு மிகுந்த துயரத்தை கொடுத்துள்ளது. ஆஸ்திரியாவின் பல பகுதிகள் போர்க்களம் போன்று காட்சியளிக்கின்றன.” என்றார்.
அதேபோல ஆஸ்திரியாவில் மரத்தில் மின்னல் தாக்கி மரம் முறிந்து விழுந்ததில் 3 பெண்கள் பலியாகினர்.
ஐரோப்பாவின் பல நாடுகளும் புயலின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.