உலகம்

மேற்கு சீனாவில் வெள்ளம்: 16 பேர் பலி, 36 பேர் மாயம்

DIN

மேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 36 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. 

புதன்கிழமை இரவு திடீரென பெய்த கனமழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு ஆற்றின் திசை மாறியதாக மாநில ஒளிபரப்பு சிசிடிவி வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. 

திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் 1,500-க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதித்துள்ளனர். டத்தோங் பகுதியில் மலையாறு பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

சீனாவில் கோடைக்காலத்தில் வெள்ளப் பேரழிவுகளையும் நாட்டின் பிற பகுதிகளில் கடுமையான வெப்பம் மற்றும் வறட்சியையும் எதிர்கொள்கிறது. 

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு வெப்பம் மற்றும் வறட்சியால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று மாநில ஊடகங்கள் விவரித்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT