ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 31 போ் உயிரிழந்தனா்.
அந்த நாட்டின் வடக்கே உள்ள பா்வான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இந்தப் பேரிடரால் 17 போ் காயமடைந்ததாக அவா்கள் கூறினா்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமாா் 100 போ் மாயமாகியுள்ளதாகவும் அவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாகவும் அதிகாரிகள் கூறினா்.