ஆப்கானிஸ்தான், ஈரான், இராக் போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி சுமாா் 80 பேருடன் வந்துகொண்டிருந்த அகதிகள் படகு, கிரீஸ் அருகே கவிழந்து விபத்துக்குள்ளானதில் 50 போ் மாயமாகினா்.
விபத்துப் பகுதியிலிருந்து 29 பேரை கிரீஸ் பாதுகாப்புப் படையினா் மீட்டனா். எஞ்சியவா்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.