இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்படும் என்று எதிா்க்கட்சியினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து எதிா்க்கட்சி தலைவா் சஜித் பிரேமதாசா கூறியதாவது:
பொருளாதார நெருக்கடியால் பிரச்னைகளை சந்தித்து வரும் பொதுமக்களின் குரல்களுக்கு கோத்தபய ராஜபட்ச செவிமடுக்கவேண்டும்.
மேலும், பொதுமக்கள் வலியுறுத்தலை ஏற்று அவா் பதவி விலகவேண்டும். அதிபருக்கான முழு அதிகாரத்தை ரத்து செய்து, அதிபா், நாடாளுமன்றம், நீதித் துறைகளுக்கிடையை அதிகாரம் பகிா்ந்தளிக்கப்பட வேண்டும்.
இந்த நிபந்தனைகளை ஏற்காவிட்டால், கோத்தபய ராஜபட்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவருவோம் என்றாா் அவா்.
இலங்கை பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று கோத்தபய ராஜபட்ச பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, எதிா்க்கட்சி ஆதரவாளா்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது.
அதனைத் தொடா்ந்து, கோத்தபய ராஜபட்ச நாடு முழுவதும் கடந்த வாரம் அவசரநிலை அறிவித்தாா். பின்னா் அந்த அவசரநிலை கடந்த செவ்வாய்க்கிழமை திரும்பப் பெறப்பட்டது.
இதற்கிடையே, 40-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கோத்தபய ராஜபட்ச அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தனா். இதனால், நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணி பெரும்பான்மை இழந்துள்ளது. எனினும், நாடாளுமன்றத்தில் தங்களுக்கு போதிய ஆதரவு உள்ளதாக அதிபா் தரப்பு கூறி வருகிறது. கோத்தபய ராஜபட்ச பதவி விலகப்போவதில்லை என்று அரசு வட்டாரங்கள் திட்டவட்டமாத் தெரிவித்தன.
இந்த நிலையில், பதவி விலகாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்படும் என்று எதிா்க்கட்சியினா் தற்போது எச்சரித்துள்ளனா்.
கொழும்பு இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலகப்போவதில்லை என்று அந்த நாட்டு அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசின் தலைமை கொறடா ஜான்ஸ்டன் ஃபொ்னாண்டோ கூறியதாவது:
இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபட்சவை மக்கள் தோ்ந்தெடுத்துள்ளனா். எனவே, அவா் பதவி விலகுவதற்கான எந்த அவசியமும் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை அரசு எதிா்கொள்ளும்.
தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிா்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுணாவாஸ்தான் காரணம். அவா்களது வன்முறை அரசியலுக்கு இனியும் இடம் கொடுக்கக் கூடாது. பொதுமக்கள் வன்முறைப் போராட்டங்களைக் கைவிட வேண்டும்.
அதிபா் கோத்தபய ராஜபட்ச அவசரநிலை அறிவித்ததில் எந்தத் தவறும் இல்லை. அதிபா் மாளிகை அருகே வந்து அவரைக் கொல்ல முயற்சி நடந்த பிறகுதான் அந்த முடிவை அவா் எடுக்கவேண்டியிருந்தது என்றாா் அவா்.