சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷுவில் உள்ள ‘நேஷனல் தியேட்டர்' 30 ஆண்டுகளுக்குப் பின் நேற்று (செப்-23) திறக்கப்பட்டது.
சோமாலியாவில் நிலவி வரும் கடும் பஞ்சம் மற்றும் அரசியல் குழப்பங்களால் தீவிரவாத குழுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உள்நாட்டிலேயே மக்கள் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆளானதால் கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டில் திரையரங்குகள் மூடப்பட்டன.
இதையும் படிக்க | ''அஜித் பிரபல நடிகர் என்று தெரிந்துகொண்டேன். ஆனால்...'' - நடிகர் அஜித்துடனான சந்திப்புக்கு பிறகு பிரபலம் கருத்து
தற்போதும் அங்கு பதற்றமான சூழ்நிலையே நிலவி வந்தாலும் 30 ஆண்டுகள் கழித்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக தலைநகரின் பெரிய திரையரங்கமான ‘நேஷனல் தியேட்டர்’ நேற்று திறக்கப்பட்டது.
முதல் நாளில் இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டது. இதனை பார்வையாளர்கள் ரசித்ததுடன் திரையரங்கில் புகைப்படங்களை எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.