உலகம்

சிங்கப்பூரில் அதிகரிக்கும் கரோனா: கட்டுப்பாடுகள் விதிப்பு

DIN

சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து வரும் வாரம் முதல் அங்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. 

கரோனா மூன்றாவது அலை காரணமாக சில நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இதனால் அடுத்த வாரம் முதல் சில கட்டுப்பாடுகளை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மக்கள் பொது இடங்களில் கூடாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமூக கூட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. 

அதேநேரத்தில் அங்கு நகரங்களில் தடுப்பூசி செலுத்துவதும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. 50 முதல் 59 வயதுடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT