உலகம்

‘ஏமன் நாட்டில் 1.6 கோடி பேர் பட்டினியில் உள்ளனர்’: ஐநா கவலை

DIN

ஏமன் நாட்டில் நிலவி வரும் பஞ்சத்தின் காரணமாக 1.6 கோடி மக்கள் பட்டினியில் தவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் உணவு கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது.

ஏமன் குடியரசு, மேற்கு ஆசியாவில், அரேபிய தீபகற்பத்தின் தெற்கு முனையில் அமைந்துள்ளது.

உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில் கடந்த சில வருடங்களாக நிலவி வரும் பஞ்சம் தற்போது உச்சம் தொட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் உணவு திட்டத்தின் கீழ் அண்டை நாடுகளின் உதவியால் அந்நாட்டிற்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது உணவுதிட்டத்திற்கு போதிய நிதி இல்லாததால் அக்டோபர் மாதம் மக்களுக்கு வழங்கப்படும் உணவிற்கான நிதி குறைக்கப்பட உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

மார்ச் 1 அன்று ஸ்வீடன் மற்றும் சுவிட்சர்லாந்து இணைந்து நடத்திய ஒரு மெய்நிகர் உறுதிமொழி மாநாட்டில், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் இந்த ஆண்டு ஏமனுக்கு 3.85 பில்லியன் டாலர்கள் நிதி தேவைப்படுவதாக வேண்டுகோள் விடுத்திருந்தார். 

எனினும் 1.7 பில்லியன் டாலர்கள் மட்டுமே நிதியாக கிடைக்கும் என உறுதியானதால் ஏமன் நாட்டிற்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏமன் நாட்டில் நிலவி வரும் வறுமையின் காரணமாக 1.6 கோடி மக்கள் பட்டினியை சந்தித்து வருவதாகவும், அவற்றைக் களைய உலக நாடுகள் உதவ முன்வர வேண்டும் எனவும் ஐநா வேண்டுகோள் விடுத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT