உலகம்

ரஷிய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 8 மாணவர்கள் பலி(விடியோ)

ANI

ரஷியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் திங்கள்கிழமை பலியாகியுள்ளனர்.

பெர்ம் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் வழக்கம்போல் இன்று காலை வகுப்புகள் நடைபெற்று வந்தன.

அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் வகுப்பறைக்குள் புகுந்து அங்கிருந்த மாணவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி இதுவரை 8 மாணவர்கள் பலியாகியுள்ளனர். 6க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர்.

மேலும், சிலர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிக்க வகுப்பறை ஜன்னல் வழியாக வெளியே குதித்ததில் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT