கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும் தொற்றின் தீவிரம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது .
உலகம் முழுக்க இதுவரை கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 22.84 கோடியாக உயர்ந்துள்ளது. பல்வேறு தொற்று கட்டுப்பாடு நெறிமுறைகள் மற்றும் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின்பும் இதன் தீவிரம் குறையவில்லை.
உலகளவில் பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் கரோனாவால் 4.20 கோடி பேர் பாதித்திருப்பதாகவும் 6.77 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | 7.5% இட ஒதுக்கீடு: பி.இ. மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ஸ்டாலின்
இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.34 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.44 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.
இந்நிலையில் உலகம் முழுவதும் நேற்று(செப்-19) நிலவரப்படி 590.6 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தினசரி அறிக்கையின் மூலம் தெரிய வந்திருக்கிறது.
குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அதிக அளவு தடுப்பூசி செலுத்திய நாடுகள் :
சீனா - 211.9 கோடி
இந்தியா - 80.6 கோடி
ஐரோப்பா ஒன்றியம் -60 கோடி
அமெரிக்கா - 38.6 கோடி
பிரெசில் - 20.07 கோடி