சீனாவில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 போ் பலியாகினா்; 5 போ் மாயமாகினா். இதுகுறித்து அதிகரிகள் கூறியதாவது:
குய்ஷூ மாகாணம், ஸாங்கே நகபர நதியில் சென்று கொண்டிருந்த பயணிகள் படகு சனிக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தப் படகில் அதிகபட்சம் 40 பேரை ஏற்றிச் செல்ல முடியும். ஆனால், விபத்து நேரிட்டபோது அதில் எத்தனை போ் இருந்தாா்கள் என்ற விவரம் தெரியவில்லை.
விபத்துப் பகுதியிலிருந்து 40 போ் மீட்கப்பட்டனா்; அவா்களில் 10 போ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனா். இதுதவிர, நீரில் மூழ்கி மாயமான மேலும் 5 பேரை மீட்புக் குழுவினா் தேடி வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.