இலங்கையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக அமல்படுத்துள்ள பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் வரும் அக்-1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அதிபா் கோத்தபய ராஜபட்ச தலைமையில் நடைபெற்ற கரோனா தடுப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஒரே நாளில் 15 முறை பூமியைச் சுற்றி வந்த விண்வெளி சுற்றுலாக் குழு
தினசரி பாதிப்புகள் 2,000-த்தைக் கடந்து வருவதால் மேற்கொண்டு தொற்று பரவாமல் இருக்க இந்த பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் கட்டுப்பாடுகள் விரைவில் தளா்த்தப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கெஹேலியா ரம்புக்வெலா நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
நேற்று(செப்-16) வியாழக்கிழமை நிலவரப்படி இலங்கையில் புதிதாக 2300 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் ஒட்டுமொத்தமாக இதுவரை 4,98,694 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவா்களில் 11,187 போ் தொற்றுக்குப் பலியாகியுள்ளனா்.