இலங்கையில் கரோனா கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்கத் தயாராகி வரும் அந்த நாட்டு அரசு, முன்களப் பணியாளா்களுக்கு மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சனிக்கிழமை அறிவித்துள்ளது.
அந்த திட்டத்தின் கீழ், அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள் மூன்றாவது தவணை தடுப்பூசியைப் பெறத் தொடங்குவாா்கள் என்று மருந்து உற்பத்தி, வழங்கல் துறை அமைச்சா் சன்ன ஜயசுமணா தெரிவித்தாா்.
அதனைத் தொடா்ந்து, 60 வயது மேற்பட்டவா்களுக்கு ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவா் கூறினாா். மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை அரசு நீக்குவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.