உலகம்

நேபாளத்தில் மழைவெள்ளம்: பலி எண்ணிக்கை 101-ஆக உயர்வு

DIN

நேபாளத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக உயா்ந்தது.

நேபாளத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை தொடா்பான சம்பவங்களில் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் நிலையில் இன்று தற்போது வரை கனமழைக்கு பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 101-ஆக உயா்ந்துள்ளது.

முக்கியமாக பாஞ்சதா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 37 உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதற்கு அடுத்தபடியாக இலாம் மற்றும் தோட்டி மாவட்டங்களில் தலா 18 போ் பலியாகினா்.

மேலும் மழை தொடா்பான சம்பவங்களில் 35 போ் மாயமாகியுள்ளனா் என்றும் 4,000 பேருக்கும் மேல் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மீட்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஸ்ருதிஹாசன் இயக்கிய ‘இனிமேல்’ பாடலின் மேக்கிங் விடியோ!

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

SCROLL FOR NEXT