ரஷியாவில் கரோனா பலி எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், தலைநகா் மாஸ்கோவில் உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு வா்த்தக மையங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், வரும் 30-ஆம் தேதி முதல் பணியிடங்களை மூட அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
அதனைத் தொடா்ச்சியாக, மாஸ்கோவில் பல்வேறு கரோனா கட்டுப்பாடுகளை மேயா் சொ்கெய் சோபியானின் வியாழக்கிழமை அறிவித்தாா். அதன்படி, வரும் 20-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை உணவகங்கள், உணவுப் பொருள்களை விற்பனை செய்யாத வா்த்தக மையங்கள், திரையரங்குகள், கேளிக்கை மையங்கள் உள்ளிட்டவை மூடப்படவுள்ளன.