உலகம்

சிரியா: ராணுவப் பேருந்தில் குண்டுவெடித்ததில் 14 பேர் பலி

DIN

சிரியாவில் ராணுவப் பேருந்தில் குண்டுவெடித்ததில் 14 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் பகுதிகளில் அடிக்கடி ஆயதத் தாக்குதல்களும் குண்டுவெடிப்புகளும் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று (புதன்கிழமை) சிரியாவின் தலைநகர் தமாஸ்கஸில் காலை 7 மணி அளவில் நின்று கொண்டிருந்த ராணுவப் பேருந்தில் குண்டு வெடித்ததில் 14 பேர் பலியானதோடு பலர் காயம் அடைந்திருக்கிறார்கள்.

ஏற்கனவே போர் நடந்து பல பொதுமக்கள் அகதிகளாக நாட்டை விட்டுச் சென்றபின் திடீரென  இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்ததால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் இந்த குண்டுவெடிப்பிற்கு யார் காரணம் என விசாரணையைத் தொடங்கும் முன்பாகவே ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT