நேபாளத்தில் இன்று பிற்பகல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.7ஆகப் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,
“சிந்துபால்சோக் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1.46 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7ஆகப் பதிவாகியுள்ளது. ”
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.