ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத்தில் இன்று (அக்-18) அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 22 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.
மேலும் நிலநடுக்கதால் பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக கடந்த அக்-5 ஆம் தேதி ஆப்கனில் பைசாபாத் பகுதியில் 5.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.