வல்லரசு நாடுகளுடன் நின்றுபோயுள்ள அணுசக்திப் பேச்சுவாா்த்தையில் வரும் 21-ஆம் தேதி மீண்டும் கலந்துகொள்ளவிருப்பதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் அமீா்-அப்துல்லாஹியான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
தாங்கள் அணு ஆயுதம் உருவாக்கவில்லை என்பதை ஈரான் உறுதி செய்யவும் அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்குவதற்கும் கடந்த 2015-இல் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதிலிருந்து அமெரிக்கா பின்னா் விலகியதால் அந்த ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்காக ஆஸ்திரியா தலைநகா் வியன்னாவில் நடைபெற்று வந்த பேச்சுவாா்த்தையில் பங்கேற்பதை ஈரான் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தது.