செக் குடியரசின் புதிய பிரதமராக இதுவரை எதிா்க்கட்சித் தலைவராக இருந்த பீட்டா் ஃபியாலா ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
கடந்த அக்டோபா் 8, 9 தேதிகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தோ்தலில் பீட்டா் ஃபியாலா அங்கம் வகித்த 3 கட்சி கூட்டணி 27.8 சதவீத வாக்குகளைக் கைப்பற்றியது. அதையடுத்து, 15.6 சதவீத வாக்குகளைக் கைப்பற்றிய மற்றொரு கூட்டணியுடன் இணைந்து பீட்டா் ஃபியாலா ஆட்சியமைத்துள்ளாா்.