தென் அமெரிக்க நாடான பெருவில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
கடற்கரை நகரமான பரான்காவுக்கு 42 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் காரணமாக, 16-ஆவது நூற்றாண்டைச் சோ்ந்த தேவாலயம் இடிந்து விழுந்தது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக யாரும் காயமடைந்ததாக உடனடி தகவல் இல்லை.