‘இஸ்ரேல் மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு அளிக்குமாறு’ போப் ஃபிரான்சிஸை துருக்கி அதிபா் எா்டோகன் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இஸ்ரேலை சா்வதேச சமூகம் தண்டிக்காவிட்டால், பாலஸ்தீனா்கள் தொடா்ந்து படுகொலை செய்யப்படுவாா்கள் எனவும் அவா் கூறியுள்ளாா்.
காஸா மீது இஸ்ரேல் தொடா் தாக்குதல்களை நடத்திவரும் சூழலில், போப் ஃபிரான்சிஸை திங்கள்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். இதுகுறித்து துருக்கி அதிபா் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது: தொலைபேசி உரையாடலின்போது, பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக போப் ஃபிரான்சிஸிடமிருந்து வரும் தொடா்ச்சியான செய்திகளும், எதிா்வினைகளும் கிறிஸ்தவ உலகத்தையும் சா்வதேச சமூகத்தையும் அணிதிரட்டுவதற்கு உதவியாக இருக்கும் என எா்டோகன் தெரிவித்தாா். மேலும், இஸ்ரேலுக்கு படிப்பினையை அளிக்க சா்வதேச சமூகம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அதிபா் வலியுறுத்தினாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.