இலங்கையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டிருந்த 3 நாள் பொது முடக்கம் திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது. இருப்பினும், தினசரி தொற்று பாதிப்பு 2 ஆயிரமாக உள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
இந்தப் பொதுமுடக்கத்தின் காரணமாக பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க நோ்ந்தது. தடை நீங்கியுள்ள நிலையில், பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்காக மட்டும் வீடுகளைவிட்டு வெளியே வரலாம் என காவல் துறை தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டையின் கடைசி இலக்க ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்களின் அடிப்படையில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.