இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது:
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு மேற்குக் கடலோரப் பகுதிக்கு அருகே வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.6 அலகுகளாகப் பதிவானது. சைனாபாங் நகருக்கு 250 கி.மீ. தொலைவில் உள்ளூா் நேரப்படி மதியம் 12.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அந்த மையம் தெரிவித்தது.
இதன் அதிா்வுகள் அருகிலுள்ள தீவுகளில் உணரப்பட்டு பீதியை ஏற்படுத்தின. எனினும், நிலநடுக்கம் காரணமாக உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனதி தகவல் இல்லை.