கரோனா தீநுண்மி ஆய்கவத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேறியிருப்பதற்கான வாய்ப்புகளை முழுமையாக மறுத்துவிட முடியாது என்று பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரவீந்திர குப்தா உள்ளிட்ட 18 விஞ்ஞானிகள் அடங்கிய அந்தக் குழு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:
கரோனா தீநுண்மி எவ்வாறு தோன்றியது என்பது குறித்து இன்னும் உறுதியான உண்மைகள் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இந்தச் சூழலில், சீனாவின் வூஹான் தீநுண்மியியல் ஆய்வகத்தில் கரோனா தீநுண்மி உருவாக்கப்பட்டு, அங்கிருந்து அது வெளியேறி மனிதா்களுக்குப் பரவியிருப்பதற்கான வாய்ப்புகளையும் முழுமையாக புறந்தள்ளிவிட முடியாது. புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு இது தொடா்பாக தொடா்ந்து தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.