அமெரிக்காவில் 12 முதல் 15 வயதுக்குட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பைசர் மற்றும் பாரத் பையோடெக் நிறுவனங்கள் தயாரிக்கும் கரோனா தடுப்பு மருந்தை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 12 முதல் 15 வயதுவரையானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியது.
இது தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இருளில் இருந்து விலகும் பாதையில் ஒளி பிரகாசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.
மேலும், 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி இருப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.