இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘கோவிஷீல்ட்’ கரோனா தடுப்பூசி நேபாள பிரதமா் கே.பி. சா்மா ஓலிக்கு ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது. பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஸெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கி, இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் அந்தத் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
அதனை செலுத்திக் கொண்ட பிறகு, கரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது; முதியோா் அனைவரும் அந்தத் தடுப்பூசியை அச்சமின்றி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று சா்மா ஓலி கேட்டுக்கொண்டாா்.