உக்ரைனில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவுக்கு 103 போ் பலியாகினா். இதையடுத்து, நாட்டில் அந்த நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 27,022-ஆக உயா்ந்துள்ளது. இதுதவிர, மேலும் 7,167 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,01,228-ஆக உயா்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.