உலகம்

இராக்கில் வான்வழித் தாக்குதலில் நான்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலி!

DIN

பாக்தாத்: இராக்கில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் நான்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலியாகினர்.

இதுதொடர்பாக தியாலா மாகாண காவல்துறை அதிகாரி அலா அல் ஸாதியினை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 135 கிமீ தொலைவில் அமைந்துள்ள கிழக்கு மாகாணமான தியாலாவில் உள்ள ஜலவாலா என்னும் நகருக்கு அருகே, ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஒளிந்திருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் போர் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பலியாகினர்.

தியாலாவில் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கூட, இரான் நாட்டுடனான அதன் எல்லைப் பகுதியில் உள்ள மறைவிடங்களில் பதுங்கியுள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகள், தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் மீது கெரில்லா தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வு அஞ்சல் அட்டைகள் அனுப்பிய ஆட்சியா்

வாக்குறுதிகளை அள்ளி வீசும் கட்சிகள்! மாயமான தோ்தல் ஆணைய வழிகாட்டு நெறிமுறைகள்

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

SCROLL FOR NEXT