உலகம்

கிரீஸில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவு

DIN

கிரீஸ் நாட்டில் புதன்கிழமை 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கிரீஸ் நாட்டின் லாரிசாவுக்கு அருகிலுள்ள எலசோனா நகரத்தில் புதன்கிழமை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த கட்டடங்கள் குலுங்கியது.

அண்டை நாடுகளான அல்பேனியா, வடக்கு மாசிடோனியா மற்றும் கொசோவோ ஆகியவற்றில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் பாதுகாப்பாக வெளியேறினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT