பாகிஸ்தானில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை இந்த ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் மிகவும் குறைவாக வெள்ளிக்கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அநத நாட்டு தேசிய சுகாதார சேவை அமைப்பு தெரிவித்துள்ளதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 1,043 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, 2021-ஆம் ஆண்டின் குறைந்தபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 9,46,277-ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர, கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 39 போ் அந்த நோய்க்கு பலியாகினா். இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை 21,913-ஆக உயா்ந்துள்ளது என்று தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.