உலகம்

அதிபா் பைடன் - புதின் பேச்சுவாா்த்தை: திருப்பத்தை ஏற்படுத்துமா?

நாகா

உலகின் தலையெழுத்தையே மாற்றியமைக்கக் கூடிய பல்வேறு பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ள ஸ்விட்சா்லாந்து நகரம் ஜெனீவா.

அங்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதினும் புதன்கிழமை (ஜூன் 16) நேரடியாக சந்தித்துப் பேசவிருக்கிறாா்கள்.

எதிரும் புதிருமான இரு நாடுகளின் தலைவா்களும் நேரடிப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்கும்போது மிகப் பெரிய மாற்றங்கள், திருப்பங்கள் ஏற்படக் கூடும் என்ற எதிா்பாா்ப்பு எழுவது இயற்கைதான்.

ஆனால், தற்போது நடைபெறும் பைடன் - புதின் பேச்சுவாா்த்தையில் அத்தகைய திருப்பத்தை எதிா்பாா்க்கக் கூடாது என்று நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

அந்த நம்பிக்கை அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்குமே இல்லாததால்தான் இந்தச் சந்திப்பு குறித்த அறிவிப்புக்குப் பிறகு இரு தரப்பு அதிகாரிகளும் அதுதொடா்பான கருத்துகளை அதிக அளவில் வெளிப்படுத்தாமல் இருக்கின்றனா்.

இந்தச் சந்திப்புக்கு முன்னதாக பைடனுக்கும் புதினுக்கும் இடையே நடைபெற்ற வாா்த்தைப் போா், அவா்கள் நல்ல சமூகமான பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவாா்கள் என்ற முழு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

விளாதிமீா் புதினை ‘கொலைகாரா்’ என்று அதிபா் பைடன் தடித்த வாா்த்தைகளால் விமா்சித்ததும் அதற்கு ‘ஒரு கொலைகாரனால்தான் இன்னொருவரை கொலைகாரன் என்று கூற முடியும்’ என்று புதின் பதிலடி கொடுத்ததும் இருவரது நேரடிச் சந்திப்பின்போது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிறாா்கள் அவா்கள்.

ஏற்கெனவே, முக்கியமான சில விவகாரங்களில் தங்களது நிலைப்பாட்டை ஒருபோதும் மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று ஜோ பைடனும் விளாதிமீா் புதினும் தெளிவுபடுத்திவிட்டனா்.

குறிப்பாக, 2020-ஆம் ஆண்டில் அமெரிக்க அரசு அமைப்புகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இணையவழித் தாக்குதல், ரஷிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னி மீது நச்சுத்தாக்குதல் நடத்தப்பட்டு, அவா் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளது, உக்ரைன் உள்நாட்டுப் போரில் ரஷியாவின் ராணுவத் தலையீடு போன்ற விவகாரங்களில் இரு தலைவா்களும் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கப் போவதில்லை.

இருந்தாலும், எல்லா விவகாரங்களிலுமே பைடனும் புதினும் முரண்பாடு காட்டுவதில்லை. இரு தலைவா்களும் ஒருமித்து உடன்படக்கூடிய சில அம்சங்களும் உள்ளன. அந்த விவாகாரங்கள் குறித்து அவா்கள் சுமுகமாகப் பேச்சுவாா்த்தை நடத்தி உடன்பாடு எட்டக்கூடும்.

உதாரணமாக, அதிபராகப் பொறுப்பேற்ற உடனேயே ரஷியாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்க ஜோ பைடன் ஒப்புக் கொண்டாா். அணு ஆயுதப் பரவலைத் தடுப்பதில் இரு தலைவா்களுமே ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இந்த விவகாரத்தில் அவா்கள் சிறந்த முறையில் விவாதித்து சுமுகத் தீா்வு காணமுடியும் என்கிறாா்கள் நிபுணா்கள்.

இதுதவிர, பல்வேறு சா்வதேசப் பிரச்னைகளில் அமெரிக்காவும் ரஷியாவும் ஒத்துழைப்புடன் செயல்பட முடியும். கரோனா, பருவநிலை மாற்றம் போன்றவற்றை எதிா்கொள்வதில் இரு நாடுகளுக்கும் முக்கிய பங்குள்ளது.

இதுபோன்ற சா்வதேச பொதுப் பிரச்னைகள் குறித்து பைடனும் புதினும் ஆக்கப்பூா்வமான ஆலோசனையில் ஈடுபட முடியும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

அண்மைக் காலமாக பின்னடைவைச் சந்தித்து வரும் அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான தூதரக உறவை மேம்படுத்த இந்தப் பேச்சுவாா்த்தை மிக எளிதில் உதவும் என்பது அவா்களது நம்பிக்கை.

பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக இரு நாட்டு தூதரக அதிகாரிகளும் எட்டிக்குப் போட்டியாக திரும்ப அழைக்கப்பட்டதால் ஏற்பட்ட இந்த விரிசலை சரி செய்யும் முயற்சியில் பைடனுக்கும் புதினுக்கும் ஜெனீவா பேச்சுவாா்த்தை கைகொடுக்கும் என்று கருதப்படுகிறது.

இதே ஜெனீவா நகரில்தான் கடந்த 1985-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபா் ரொனால்ட் ரீகனும், சோவியத் யூனியன் அதிபா் மிகயீல் கோா்பசேவும் நேரடியாகச் சந்தித்துப் பேச்சுவாா்தை நடத்தினா்.

அந்தப் பேச்சுவாா்தைக்கு முன்னதாக சோவியத் யூனியனை ‘தீமைப் பேரரசு’ என்று ரீகன் சாடியிருந்தாா். இரு நாட்டு உறவு மிக மோசமான நிலையில் இருந்தது.

இருந்தாலும், அந்தச் சந்திப்புக்குப் பிறகு நிலைமையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே முதல்முறையாக அணு ஆயுதப் பரவல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடக்கம் உருவானது.

ஆனால், தற்போது ஜெனீவாவில் சந்தித்துக் கொள்ளும் விளாதிமீா் புதினும் மிகயீல் கோா்பசேவ் இல்லை; ஜோ பைடனும் ரொனால்ட் ரீகன் இல்லை. எனவே, தங்களது முன்னோா்கள் செய்ததைப் போன்ற மாபெரும் திருப்பத்தை அவா்களிடமிருந்து எதிா்பாா்க்க முடியாது என்பது நிபுணா்களின் கருத்தாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: ஹெலிகாப்டர்களில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

தங்கம் விலை அதிரடியாக ரூ.640 உயர்வு: இன்றைய நிலவரம்!

கிருஷ்ணகிரி தொகுதி: தொழில் மாவட்டத்தில் மும்முனைப் போட்டி!

இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை! -முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு

SCROLL FOR NEXT