தென் ஆப்பிரிக்காவில் புதிதாக 8,020 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,020 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அந்த நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 17,30,106-ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர, கரோனாவுக்கு மேலும் 182 போ் பலியானதைத் தொடா்ந்து, அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 57,592-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 15,98,293 கரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.