கிழக்கு ஆப்கானிஸ்தானின் லக்மன் பகுதியில் ஏற்பட்ட இருவேறு வாகன விபத்துகளில் சிக்கி 20 பேர் இறந்ததாகவும் , 18 பேர் வரை காயமடைந்ததாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது .
இரண்டு பக்கம் நடைபெற்ற இந்த விபத்துகளில் இன்று (சனிக்கிழமை ) தவ்லாதலை பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனத்தில் இருந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் , 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் நேற்று (வெள்ளிக்கிழமை) லக்மன் பேருந்து விபத்தில் 8 பேர் பலியானார்கள் , 10 பேர் காயங்களுடன் லக்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசலும் , மோசமான சாலைகளுமே விபத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .
இந்த விபத்துகளில் பெண்களும் , குழந்தைகளும் கூட பலியானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.