உலகம்

ஆப்கானிஸ்தான் : வாகன விபத்தில் 20 பேர் பலி , 18 பேர் காயம் 

DIN

கிழக்கு ஆப்கானிஸ்தானின் லக்மன் பகுதியில் ஏற்பட்ட இருவேறு வாகன விபத்துகளில் சிக்கி 20 பேர் இறந்ததாகவும் , 18 பேர் வரை காயமடைந்ததாகவும்  அரசுத் தரப்பில்  கூறப்பட்டிருக்கிறது .

இரண்டு பக்கம் நடைபெற்ற இந்த விபத்துகளில்  இன்று (சனிக்கிழமை ) தவ்லாதலை பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனத்தில் இருந்த 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் , 8 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும்  நேற்று (வெள்ளிக்கிழமை) லக்மன் பேருந்து விபத்தில் 8 பேர் பலியானார்கள் , 10 பேர் காயங்களுடன் லக்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றும் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும்  வாகன நெரிசலும் , மோசமான சாலைகளுமே  விபத்திற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

இந்த விபத்துகளில் பெண்களும் , குழந்தைகளும் கூட பலியானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அகிம்சை என்னும் அழியாப் பேரொளி!

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும்: கே.ஏ.செங்கோட்டையன்

இளம் வாக்காளா்களுக்கு எல்.முருகன் பாராட்டு

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெறும்: ஈவிகேஎஸ்.இளங்கோவன்

காவல் துறை அதிகாரியுடன் மோதல்: திமுக நிா்வாகியிடம் விசாரணை

SCROLL FOR NEXT