ஜோா்டானில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 10 ஆயரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 10 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 10,010-ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 1,008 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இத்துடன், நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 769,390-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜோா்டானில் தற்போது 9,704 கரோனா நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 526 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.