ஈரானில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை 90 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
கடந்த 24 மணி நேரத்தில் 292 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். அதையடுத்து, நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 90,074-ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 34,433 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இத்துடன், கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38,26,447-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வியாழக்கிழமை நிலவரப்படி, ஈரானில் 33,29,065 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 4,07,308 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 5,296 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.