அமெரிக்காவில் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு, அந்தத் தடுப்பூசிகளை வாங்குவதற்காக 100 டாலா் (சுமாா் ரூ.75,000) உதவித் தொகை அளிக்க வேண்டும் என்று மாகாண அரசுகளிடம் அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளாா்.
நாட்டில் கரோனா தடுப்பூசி திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் அவா் வெளியிட்டுள்ள புதிய செயல்திட்டத்தில் இந்த உதவித் தொகை அம்சமும் இடம் பெற்றுள்ளது. இதுதவிர, மத்திய அரசு ஊழியா்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்; அல்லது தாங்கள் ஏற்கெனவே தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரத்தை சம்பந்தப்பட்ட துறைகளிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் ஜோ பைடனின் புதிய செயல்திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.