உலகம்

ஆப்கானிஸ்தான் : வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் பலி

DIN

ஆப்கனிஸ்தான் நாட்டின் காம்திஷ் பகுதியில் நேற்று ( புதன்கிழமை) இரவு பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில்  40 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இதுவரை பலியான 40 பேரின் உடலை கைப்பற்றியதாகவும் 150 வரை மாயமானதாகவும் தெரிவித்தனர். 

இரவோடு இரவாக 80 வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மீட்புப் பணியில் இருந்த மீட்புப்படையினர் கூறியிருக்கிறார்கள்.

கடந்த மாதம் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 12 பலியானது குறிப்பிடத்தக்கது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

இன்ஸ்டா பக்கத்திலிருந்து வெளியேறியது ஏன்? - யுவன் விளக்கம்!

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

SCROLL FOR NEXT