உலகம்

கேமரூனில் பேருந்து – ட்ரக் மோதலில் 14 பேர் பலி

DIN

யவுண்டே: ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பேருந்து – ட்ரக் நேருக்கு நேராக மோதிய விபத்தில் 14 பேர் பலியானார்கள்.

கேமரூனின் மேற்குப் பகுதியில் உள்ள சாங் நகரில் புதன் அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது. இதுதொடர்பாக உள்ளூர் காவல்துறை அதிகாரி ஜோன்ஸ் நந்தாவின் பேட்டியை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாவது:

உள்ளூர் நேரப்படி புதன் அதிகாலை 3.30 மணியளவில் குறுகலான சாலைப் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 38 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சடலங்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

சாத்தூரில் முதன் முறையாக வாக்களித்த திருநங்கைகள்

வாக்குச்சாவடி முற்றுகை: பொதுமக்கள் வாக்குவாதம்

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

SCROLL FOR NEXT