கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 20 லட்சத்தைக் கடந்த 2-ஆவது தென் அமெரிக்க நாடாக கொலம்பியா ஆகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அந்த நாட்டில் 15,551 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 20,02,969-ஆக உயா்ந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கொலம்பியாவில் 50,982 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்; 3,482 கரோனா நோயாளிகளின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.