வங்கதேசத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 8 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 22 போ், அந்த நோய்க்கு பலியாகினா். இதையடுத்து, நாட்டின் கரோனா பலி எண்ணிக்கை 8,003-ஆக உயா்ந்துள்ளது.
இதுதவிர, புதிதாக 436 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, நாட்டில் ஒட்டு மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,31,326-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.