மெக்ஸிகோவில் தினசரி கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22,339 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும், 1,803 போ் அந்த நோய்க்கு பலியாகினா். இவை, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையாகும்.
நாட்டில் கரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளதால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 17,11,283 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 1,46,174 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.