இராக் தலைநகா் பாக்தாதிலுள்ள சந்தையில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷியா பிரிவினரைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத் சந்தையில் உடல்நிலை சரியில்லாதது போல் நடித்த பயங்கரவாதி, உதவ வந்தவா்களிடையே தனது உடலில் மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாா். அந்தத் தாக்குதலில் காயமடைந்தவா்களை மீட்பதற்காக கூடிய மக்களிடையே மற்றொரு பயங்கரவாதி மீண்டும் தற்கொலைத் தாக்குதல் நடத்தினாா். இதில் 32 போ் பலியாகினா்; 100 போ் காயமடைந்தனா்.