உலகம்

ஜிம்பாப்வேவில் கரோனாவுக்கு மேலும் ஓர் அமைச்சர் பலி

DIN

ஜிம்பாப்வே போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை அமைச்சர் ஜோயல் மடிசா கரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தாா். 
ஜிம்பாப்வேயில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த கரோனா பரவல், அண்மைக் காலமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிகை 30,000ஆக உயர்ந்துள்ளது. 
இந்த நிலையில் அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் ஜோயல் மடிசா கரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தாா். கடந்த ஒரு வாரத்தில் ஜிம்பாப்வே நாட்டில் கரோனாவுக்கு பலியாகும் 3ஆவது அமைச்சர் இவர் ஆவார். 
முன்னதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் சிபுசிஸோ மோயோ கரோனா பாதிப்பால் ஜன.15ஆம் தேதி உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT