கரோனா தொற்றால் ஸ்பெயினில் ஒரேநாளில் 404 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 44,357 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனா தொற்றின் தீவிரம் குறையாத நிலையில், ஸ்பெயினில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் அதிக பாதிப்பு, பலி பதிவாகியுள்ளது.
அதன்படி, ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 44,357 பேர் உள்பட இதுவரை 24,56,675 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 404 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 55,041 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கரோனா பாதிப்பில் ஸ்பெயின் 7 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.