உலகம்

ஜெர்மனியில் கரோனா பலி 50 ஆயிரத்தைக் கடந்தது!

DIN

ஜெர்மனியில் கரோனாவுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

கடந்த 10 மாதங்களாக  உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் தொற்று புதிய வகையில் உருவெடுத்துள்ளது. பல்வேறு நாடுகளில் உருமாறிய கரோனா வைரஸ் தொற்றும் பரவி வரும் நிலையில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஜெர்மனியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 17,862 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 21,06,262 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் நேற்று ஒரேநாளில் 859 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 50,642 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் 17 லட்சம் பேர் வரையில் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

ராபர்ட் கோச் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT