உலகம்

கரோனா தடுப்பூசி: மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பிரேசில்

DIN

பிரேசில் பிரதமரின் கோரிக்கையை ஏற்று கரோனா தடுப்பூசியை அனுப்பிய மத்திய அரசுக்கு அந்நாட்டு அரசு நன்றி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புணேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் 20 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை பிரேசிலுக்கு அனுப்பி வைக்கக் கோரி பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 20 லட்சம் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை பிரேசிலுக்கு இந்தியா அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டது. பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியாவில் உள்ள பிரேசில் தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு தடுப்பூசியைப் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. 

இந்நிலையில் கப்பல் மூலம் அனுப்பப்பட்ட தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை பிரேசிலை சென்றடைந்தன. இதற்கு இந்தியாவிற்கான பிரேசில் தூதர் ஆண்ட்ரே அரன்ஹா கொரியா நன்றி தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதார கண்காணிப்பு முகமை ஒப்புதல் அளித்த ஐந்து நாட்களுக்குள் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பிரேசில் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று பிரேசிலின் சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT