புகாரெஸ்ட்: தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் சுமாா் 3,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,00,898-ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 116 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, நாட்டின் மொத்த கரோனா பலி 17,485-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதன்கிழமை நிலவரப்படி, ருமேனியாவில் கரோனா உறுதி செய்யப்பட்ட 6,35,871 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 47,542 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 1,054 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.